Friday, July 3, 2015

ஐந்துவிரல் ஜெபம்
பெருவிரல் - இது உனக்கருகில் உள்ள விரலாகும். ஆகவே உனக்கு நெருக்கமானவர்களுக்காக முதலில் ஜெபிக்கத் தொடங்கு அவர்கள்தான் அடிக்கடி உன் ஞாபகத்திற்கு வரக்கூடியவர்கள். தமது அன்பானவர்களுக்காக ஜெபிப்பது “இனிமையான கடமை“ என C.S. லுயிஸ் என்ற தேவபக்தன் கூறியிருக்கிறார்.

ஆள்காட்டிவிரல் - இது ஒன்றை சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விரலாகும். எனவே வழிநடத்தும் உன் ஆசான்களாக போதகர்கள். ஊழியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என உனக்கு போதித்து வழிநடத்துபவர்களுக்காக ஜெபி. மற்றவர்களை சரியான பாதையிலே வழிநடததும் அவர்களுக்கு மிகுந்த ஞானம் அவசியமானதாகும். எனவே அவர்களை உனது ஜெபத்தில் நினைவுகூற மறவாதே.

நடுவிரல் - இது உயரமான விரலாகும். இது தலைமைத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. எமது தேசத்தின் தலைவர்கள், அரச அதிகாரிகள், வியாபார தொழிற்துறை வல்லுநர்கள், நிர்வாகிகளுக்காக ஜெபி். இவர்கள்தான் எமது நாட்டின் மக்களை வழிடத்தி, தேசத்தை கட்டியெழுப்புகிறவர்கள. எனவே அவர்களுக்கு தேவனுடைய வழிநடத்துதல் மிக அவசியம்.

மோதிரவிரல் - ஒரு இசைக்கலைஞனிடம் கேட்டால் விரல்களில் மிகவும் பெலவீனமானது இந்த விரலே என்பதை ஒப்புக் கொள்வான். இது வேதனை துன்பம் துயரத்தில் உள்ளவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டியது மிக அவசியம்.

சுண்டுவிரல் - இது கடைசி விரலாகும். மற்றவர்களுக்காக ஜெபிக்கும் நாம் கடைசியாக நமது தேவைகளை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கலாம். இப்படியாக முதலில் மற்றவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும்போது, மற்றவர்களுக்காக நமது தேவைகளை சரியான விதத்தில் கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வதோடு ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்

0 comments: