Friday, July 3, 2015

பாவி என்னும் கண்டுபிடிப்பு நவீன மருத்துவத்தின் தந்தையாகப் புகழப்படும் சேர். ஜேம்ஸ் சிம்சன் என்பார் 1847ம் ஆண்டு, அறுவைச் சிகிச்சையின் போது நோயாளிக்கு வேதனையுணர்வு ஏற்படாதிருக்கும் “குளொஃரோபோம்“ எனும் மருந்தைக் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பெரும் திருப்புமுனையாக உள்ளது.

குளொஃரோபோம் மருந்தைதக் கண்டுபிடித்த சில வருடங்களின் பின்னர் சேர். ஜேம்ஸ் சிம்சன், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் அவரிடம், “உங்களுடைய கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் பெறுமதியானதாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டான்.

சேர். ஜேம்ஸ் சிம்சன் அக்கேள்விக்கு குளோரோஃபோர்ம் என்றே பதிலளிப்பார் என்ற எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் 'நான் பாவி என்பதையும், இயேசுக்கிறிஸ்து என்னுடைய இரட்சகர் என்பதையும் நான் கண்டுபிடித்ததையே என்னுடைய கண்டுபிடிப்புகளில் அனைத்திலும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்“ என்றார்

கணிதமேதையும் அண்டவெளி ஆராய்ச்சிளாளரும் பிரபல விஞ்ஞானியுமான கொப்பர்நிக்கஸ் என்பார் மரிக்கும் தருவாயில், தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக அல்ல, மாறாக இரட்சகரின் உதவி தேவைப்படும் ஒரு பாவியாகவே கண்டார்.

அவருடைய அறிவுத்தலின்படி அவரது கல்லறையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. “பவுலுக்கு காட்டப்பட்டது போன்ற இரக்கம் எனக்கு காட்டப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல், பேதுருவிற்குக் கிடைத்தது போன்ற ஒரு கிருபை எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. ஆனால் நீர் அந்தக் கள்ளனுக்கு கொடுத்த மன்னிப்பை எனக்கும் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்“

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் மேதைகளும் கூட தாங்கள் பாவிகள் என்பதையும் தம்மை இரட்சிப்பவர் இயேசுக்கிறிஸ்து என்பதையும் உணர்ந்துள்ளனர். இத்தகைய உணர்வு மனிதர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் அப்போது அவர்கள் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் பரலோக வாழ்வின் மகிமையையும் பெற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் பாவிகளாக உள்ளனர். (ரோமர் 3:23) அவர்களை இரட்சிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (1 தீமோ. 1:15)

உண்மையில், நாமும் கண்டுபிடிக்க வேண்டிய உண்மையாக இது உள்ளது.

ஜான் வெஸ்லி-யிடம் ஊழியர்களே கற்றுக்கொள்ளுங்கள்! ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இவர் தன் வாழ்நாளில் 4லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையிலேயே பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தேவனைப் பற்றி பிரசங்கம் செய்வார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் சுற்றுவார். இப்படி 40 ஆண்டுகள் தனது பயணத்தை நடத்தினார்.

பயணத்தின் ஊடே அவர் 400 புத்தகங்களையும் எழுதி முடித்து விட்டார். 4 ஆயிரம் பிரசங்கங்களை செய்துள்ளார். பத்து மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டார்.

இப்படியே 83 வயது வரை சுறுசுறுப்பாகவே நடந்தது. என்ன தான் இருந்தாலும் முதுமை மனிதனை தள்ளாடச் செய்யுமே!

தொடர்ந்து 18 மணி நேரம் வரை எழுதக்கூடிய அவர், ""இப்போதெல்லாம் என்னால் 15 மணி நேரம் கூட தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. அவ்வாறு எழுதினால் கண்கள் களைப்படைந்து விடுகின்றன. அது மட்டுமல்ல! தினமும் இரண்டு தடவைக்கு மேல் பிரசங்கம் செய்ய முடியவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

முன்பெல்லாம் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவேன். இப்போது இன்னும் கொஞ்சம் தூங்கலாமே என்ற எண்ணம் மேலிடுகிறது,'' என்று வருத்தப்பட்டு தன் டைரியில் எழுதி வைத்திருந்தார்.

இவர்களைப் போன்ற உழைப்பாளிகளைப் பார்த்து நாம் திருந்த வேண்டும்.

தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உண்மையும் உத்தமமும் சுறுசுறுப்பும் வாய்ந்த ஊழியர்களைத் தேவன் தேடுகிறார். சோம்பேறித்தனத்தை அறவே ஒழியுங்கள். தேவபணியை விருப்பத்துடனும், உற்சாகத்துடனும் செய்யுங்கள்.

-இவ்வாறு "சம்ஸ்" என்ற எழுத்தாளர் தன்னுடைய வலைபதிவில் தேவபணியை குறித்து குறிப்பிடுகிறார்.

ஐந்துவிரல் ஜெபம்
பெருவிரல் - இது உனக்கருகில் உள்ள விரலாகும். ஆகவே உனக்கு நெருக்கமானவர்களுக்காக முதலில் ஜெபிக்கத் தொடங்கு அவர்கள்தான் அடிக்கடி உன் ஞாபகத்திற்கு வரக்கூடியவர்கள். தமது அன்பானவர்களுக்காக ஜெபிப்பது “இனிமையான கடமை“ என C.S. லுயிஸ் என்ற தேவபக்தன் கூறியிருக்கிறார்.

ஆள்காட்டிவிரல் - இது ஒன்றை சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விரலாகும். எனவே வழிநடத்தும் உன் ஆசான்களாக போதகர்கள். ஊழியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என உனக்கு போதித்து வழிநடத்துபவர்களுக்காக ஜெபி. மற்றவர்களை சரியான பாதையிலே வழிநடததும் அவர்களுக்கு மிகுந்த ஞானம் அவசியமானதாகும். எனவே அவர்களை உனது ஜெபத்தில் நினைவுகூற மறவாதே.

நடுவிரல் - இது உயரமான விரலாகும். இது தலைமைத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. எமது தேசத்தின் தலைவர்கள், அரச அதிகாரிகள், வியாபார தொழிற்துறை வல்லுநர்கள், நிர்வாகிகளுக்காக ஜெபி். இவர்கள்தான் எமது நாட்டின் மக்களை வழிடத்தி, தேசத்தை கட்டியெழுப்புகிறவர்கள. எனவே அவர்களுக்கு தேவனுடைய வழிநடத்துதல் மிக அவசியம்.

மோதிரவிரல் - ஒரு இசைக்கலைஞனிடம் கேட்டால் விரல்களில் மிகவும் பெலவீனமானது இந்த விரலே என்பதை ஒப்புக் கொள்வான். இது வேதனை துன்பம் துயரத்தில் உள்ளவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டியது மிக அவசியம்.

சுண்டுவிரல் - இது கடைசி விரலாகும். மற்றவர்களுக்காக ஜெபிக்கும் நாம் கடைசியாக நமது தேவைகளை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கலாம். இப்படியாக முதலில் மற்றவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கும்போது, மற்றவர்களுக்காக நமது தேவைகளை சரியான விதத்தில் கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வதோடு ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்

Tuesday, March 3, 2015



வேதாகமம் - Tamil Bible

audio bible


http://wordplanet.org/tm/index.htm

Sunday, March 1, 2015

 http://biblehub.com/
 
tor
Online Bible Study Suite

Monday, January 5, 2015

learn about ur religious book written by one of muslim scholars!


Sunday, March 30, 2014


for bible related cources 

http://biblehub.com