Sunday, January 7, 2018

Daily prayer

1. *தலை:*
கர்த்தர் என் தலையை  எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார்
ஸ்தோத்திரம்(சங்23:5)

2. *முகம்:*
கர்த்தர் அவர் முகத்தை என் மேல்
பிரகாசிக்கச் செய்கிறார்
ஸ்தோத்திரம்.(எண்6:25)

3. *நெற்றி:*
கர்த்தர் என் நெற்றியில்
அவருடைய நாமத்தை
தரிப்பித்திருக்கிறார்
ஸ்தோத்திரம்.(உபா28:10)

4. *கண்:*
கர்த்தர் என் கண்களைக்
கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8)

5. *செவி:*
கர்த்தர் நான் கேட்கும்படி
என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்.(ஏசா50:4)

6. *வாய்:*
கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார்
ஸ்தோத்திரம் (சங் 103:5)

7. *உதடுகள்:*
கர்த்தர் என் உதடுகளைப்  பரிசுத்தப்படுத்துகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா6:7)

8. *நாவு:*
கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத்
தருகிறார்.ஸ்தோத்திரம்.
(ஏசா50:4)

9. *கழுத்து*:
கர்த்தர் கழுத்திலிருந்து
என் நுகத்தை நீக்குகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

10. *தோள்:*
கர்த்தர் என் தோள்களை
சுமைக்கு விலக்குகிறார்
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

11. *கை:*
கர்த்தர்  என் கைகளின்
பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார் 
ஸ்தோத்திரம்.(சங்128:2)

12. *விரல்கள்:*
கர்த்தர் என் விரல்களை
யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்
ஸ்தோத்திரம்(சங்144:1)

13 *மார்பு:*
கர்த்தர் எனக்கு நீதியின்
மார்க்கவசத்தைத் தருகிறார்  ஸ்தோத்திரம்.
(எபே6:14)

14. *வயிறு:*
கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார்
ஸ்தோத்திரம்.(நீதி13:25)

15. *முதுகு:*
கர்த்தர் என் பாவங்களை
எல்லாம்  அவர் முதுகுக்குப் பின்னாக
எறிந்துவிட்டார்.
ஸ்தோத்திரம்.(ஏசா38:17)

16. *இடுப்பு:*
கர்த்தர்எனக்கு சத்தியம்
என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார்.
ஸ்தோத்திரம்(எபே6:14)

17. *முழங்கால்:*
கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக
முடங்கச் செய்கிறதற்காக
ஸ்தோத்திரம்.(ஏசா45:23)

18. *கால்கள்*:
கர்த்தர் என் கால்களை
இடறலுக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்.(சங்116:8)

19. *பாதம்*
கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத்
தூதர்களைத்  தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம்.
(சங்91:12)

20. *எலும்பு*:
கர்த்தர் என் எலும்புகளையெல்லாம்
நிணமுள்ளதாக்குகிறார்
ஸ்தோத்திரம்.(ஏசா58:11)

21. *மாமிசம்*:
கர்த்தர் என் மாமிசத்தை
நம்பிக்கையோடே தங்கி யிருக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்(சங்16:9)

22. *ஆத்துமா*:
கர்த்தர் என்ஆத்துமாவை
மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம்.(சங்116:8)

23. *இருதயம்* :
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். (சங் 13:5)

24. *ஆவி* :
மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும். (நீதி 20:27)

25. *சிந்தை* :
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலி 2:5)

   தேவரீர்  என்
ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம் .எனக்காய் ஜீவனைக் கொடுத்த
தேவனே,உமக்கே என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன்,
இயேசு கிறிஸ்து மூலமாய்
ஆமென

0 comments: